Oct 4, 2006

ஒரு மாலை பொழுது

கருமேக கூட்டம்
சூழ்ந்திருக்க
செடி கொடி எல்லாம்
நின்றிருக்க

வந்ததே
தென்றல் காற்றும்
வந்ததே !
தந்ததே
புதுமண் வாசனையும்
தந்ததே !

சில்லென்ற
மழைத்துளி ஒன்று
கையில் வ ந்ததே !
பளிர் என்ற
மின்னல் ஒளியும்
கண்ணில் தெரிந்ததே !

கதிரவனின்
செங்கதிர்கள் மெல்ல
மறைந்ததே !
வெண்ணிலவும்
மேகத்திரையில்
முகத்தை ஒளித்ததே !

இது ஒரு
பகலின் முடிவா?
இல்லை, இருள்படர்
இரவின் தொடக்கமா?
இல்லை, வானிலையில்
புது மாற்றமா?

இந்த நொடிப்பொழுதை
கையில் அடக்கவா?
இல்லை, வார்த்தைகளில்
வடிவம் கொடுக்கவா?
இல்லை, என் ராகத்தில்
இசையை மீட்டவா?

Blog Archive

All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.