Oct 6, 2008

அலையும் நானும்

Rambled this piece during a quiet evening date with the sea and the waves at Marari Beach

கரையை தொட்டுச் செல்லும் அலையே
என்ன சேதி கொண்டு வந்தாய் எனக்கு

என்னை ரசிக்கும் உனக்கு பரிசுகள்
பல கொண்டு வந்தேன் தொலைதூரத்திலிருந்து

உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை
உன் புதிர் மொழியின் அர்த்தம் தேடும் வேளையில்

எதிர்பாரா நேரத்தில் உன் கண்களின் பிரகாசத்தை
உணர இதோ கொண்டு வந்தேன் ஆழ்கடல் சிற்பிகள்

எத்தனை அழகு எத்தனை வடிவம்
என் சமர்ப்பணம் இந்த அதிசய சிற்பிகளுக்கு

வெள்ளை கூடை கொண்டு சேர்த்த
பல வண்ண பூக்கள்
தொட்டு எடுத்த என் கைகளும்
நிறம் மாறிய அற்புதங்கள்

ஆதவன் மறையும் வேளையில்
மேகக்கூட்டம் ஆடும் நடனங்கள்
அமைதியான இந்த தருணத்தை
எடுத்து செல்ல முயலும் வார்த்தைகள்

தென்றல் தீண்டிய என் கூந்தல்
கவிதை எழுத துடிக்கிறதே
அதை கட்டுப்படுத்தும் என் கைகளும்
போராடி களைக்கிறதே

காற்று திசை நோக்கிச் செல்ல
கால்கள் இரண்டும் பறக்கிறதே
மேகத்தின் உள்ளே நீந்திட
என் மனமும் அலை பாய்கிறதே

Blog Archive

All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.